முகப்பு
செய்திகள்

அய்யனார் துணை தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் தீபக்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரின் தெலுங்மு மொழி மறுஉருவாக்கம் குறித்து...

Updated On : 27 அக்டோபர் 2025, 3:11 pm IST
தீபக் - படம் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரின் தெலுங்கு மொழி மறுஉருவாக்கத்தில் நடிகர் தீபக் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஈரமான ரோஜாவே, என்றென்றும் புன்னகை மற்றும் மனசெல்லாம் போன்ற வெற்றித் தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்த தீபக், தற்போது தெலுங்கு மொழியிலும் நேரடியாக நாயகனாக நடிக்கவுள்ளார்.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் பரமேஸ்வரி ரெட்டிக்கு நாயகனாக கரிகாலன் என்ற பாத்திரத்தில் தீபக் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் தீபக்கின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் இந்த ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

Advertisement

Advertisement

சொந்தமாக ஸ்டூடியோ நடத்திவரும் தீபக், நடிப்புத் துறையில் முழுநேரமாக கவனம் செலுத்தி வருகிறார். குறும்படங்களிலும் இணையத் தொடர்களிலும் நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கு மொழியில் நேரடியாக நடிக்கவுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அய்யனார் துணை தொடரில் எதிர்நீச்சல் புகழ் மதுமிதா நாயகியாக நடித்துவரும் நிலையில், தெலுங்கில் தீபக்கிற்கு நாயகியாக நடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அய்யனார் துணை தொடரில்... - படம் - இன்ஸ்டாகிராம்

நடிப்பின் மூலமும் வசீகரமான தோற்றத்தின் மூலமும் ரசிகர்களைக் கவர்ந்த தீபக், கயல் தொடரில் நடித்துவரும் நடிகை அபிநவ்யாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிநவ்யாவுடன் தீபக் - படம் - இன்ஸ்டாகிராம்
summary

Deepak act in Ayyanar thunai serial telugu remake

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments