இரு நாயகிகள், ஒரு நாயகன் - பழைய கதையில் புதிய தொடர்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திருமாங்கல்யம் என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திருமாங்கல்யம் என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
ஆல்யா மானசா நடிப்பில் பாரிஜாதம் என்ற தொடர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், மேலுமொரு புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபமாக அடுத்தடுத்து புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப்போன்று தொடர்களுக்கும் ஜீ தமிழ் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
Advertisement
Advertisement
அந்தவகையில், அனைத்துத் தரப்பு ரசிகர்களைக் கவரும் வகையிலும் புதிய தொடர்களை ஜீ தமிழ் நிர்வாகம் ஒளிபரப்பி வருகிறது. இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் ஆல்யா மானசா மாற்றுத்திறனாளியாக நடிக்கும் பாரிஜாதம் என்ற தொடர் இன்றுமுதல் (செப். 8) ஒளிபரப்பாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இல்லத்தரசிகளைக் கவரும் வகையில், திருமாங்கல்யம் என்ற தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
இத்தொடர் இரு நயாகிகள், ஒரு நாயகன் கதையம்சத்துடன் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர். ஆர். கிரியேஷன் இத்தொடரை தயாரிக்கிறது.
காயூ ஸ்ரீ, மேகா சல்மான் ஆகியோர் நாயகிகளாகவும், பிரித்விராஜ் நாயகனாகவும் நடிக்கவுள்ளனர். இதில், மேகா சல்மான் கேரளத்தில் சில தொடர்களில் நடித்துள்ளார். பிரித்விராஜ் என்பவர் தெலுங்கில் மூன்று தொடர்களில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க | என்னை நம்பியவர் - ஆல்யா மானசா பகிர்ந்த படம்!
Gayu sri megha salman Thirumangalyam a new serial in Zee tamil
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.