ராம் சரண்.  படம்: ஆர்ச்சரிபிஎல்
செய்திகள்

வில்வித்தைக்கான உலகின் முதல் லீக் இந்தியாவில் அறிமுகம்..! விளம்பர தூதராக ராம் சரண்!

இந்தியாவில் நடைபெறும் வில்வித்தைக்கான ஏபிஎல் போட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவில் நடைபெறும் வில்வித்தைக்கான விளம்பர தூதராக நடிகர் ராம் சரண் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்ஆர்ஆர் படத்தில் நடிகர் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது, பெட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார்.

வில்வித்தைக்கான உலகின் முதல் லீக் இந்தியாவில் அறிமுகம்

உலகத்திலேயே முதல்முறையாக வில்வித்தைக்கான லீக் போட்டி இந்தியாவில்தான் நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டிகளை ஏபிஎல் (ஆர்ச்சரி பிரீமியர் லீக்) என்ற பெயரில் இந்தியாவின் வில்வித்தைக்கான அமைப்பு நடத்துகிறது.

இந்தப் போட்டியில் மொத்தமாக 6 அணிகள் பங்கேற்கின்றன. அதில் 36 இந்திய வீரர்களும், 12 வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்.

ஓர் அணிக்கு 8 பேராக (4 ஆண்கள் 4, பெண்கள்), மொத்தம் 48 பேர் விளையாடுகிறார்கள்.

இந்தப் போட்டிகள் அக்.2 முதல் அக்.12ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. நேரலையாக துர்தர்ஷன் தொலக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டாரிலும் பார்க்கலாம்.

வில்வித்தை என்பது கவனம், துல்லியம், வலிமை!

விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள ராம் சரண் கூறியதாவது:

வணக்கம். என்னை ஏபிஎல் தொடரின் விளம்பர தூதராக நியமித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகிலேயே முதல்முறையாக இந்த லீக் போட்டி நமது நாட்டின் பழமையான, வலிமையான விளையாட்டிற்கான அற்பணிக்காக இருக்கிறது.

வில்வித்தை என்பது கவனம், துல்லியம், வலிமையைப் பிரதிபலிக்கிறது. இதன் மதிப்புகள் களத்திலும் வெளியேவும் இணைந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு இந்தத் தொடர் உத்வேகம் அளிக்குமென நம்புகிறேன். வில்லை எடுத்து, நோக்கத்தோடு எய்துங்கள், சிறப்பை அடையுங்கள் என்றார்.

Ram Charan Named Brand Ambassador for Inaugural Archery Premier League

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘தி கேரளா ஸ்டோரி 2’ வெளியிட இடைக்கால தடை தொடருகிறது! - கேரள உயர்நீதிமன்றம்

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் பொருத்தப்பட்ட இரும்பு ஷட்டா்கள்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

SCROLL FOR NEXT