பாசில் ஜோசப் - அக்ஷய் குமாரின் ராவடி படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீடு அறிவிப்பு!
ராவடி படத்தின் படப்பிடிப்பு நிறைவு தொடர்பாக...
சிறை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கவனம் ஈர்த்த அக்ஷய் குமார் நடித்துள்ள ராவடி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் எஸ். எஸ். லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பாசில் ஜோசப், அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.
Advertisement
நடிகர்கள் பாசில் ஜோசப் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, படத்தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் படத்தை கோடை காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.