சமூக ஊடகங்களிலிருந்து விலகினார் விஷ்ணு விஷால்!
சமூக ஊடகங்களிலிருந்து நடிகர் விஷ்ணு விஷால் விலகியது குறித்து...
நடிகர் விஷ்ணு விஷால் சமூக ஊடகங்களிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக வெள்ளிக்கிழமை (ஏப்.3) தெரிவித்துள்ளார்.
வெண்ணிலா கபடிகுழு, குள்ளநரி கூட்டம், ராட்சசன், கட்டா குஸ்தி மற்றும் ஜீவா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.
தனது எக்ஸ் தளத்தில், ”சமூக ஊடகங்களிலிருந்து சிறிது காலம் விலகுகிறேன். விரைவில் புதிய படங்களுக்கான அப்டேட்களுடன் திரும்ப வருவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
அடுத்து, இரண்டு வானம் என்ற காதல் திரைப்படத்திலும், 2022-ல் வெளியான கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகமான கட்டா குஸ்தி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ராம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தமிழ்த் திரைப்படம் இரண்டு வானம். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.
இவரின் சமீபத்திய படைப்பான ஆர்யன் திரைப்படம் 2025 நவம்பரில் வெளியானது. இப்படத்தை பிரவீன் கே இயக்க, விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. இப்படத்தை பிரவீன் கே இயக்க, விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது.