முகப்பு
செய்திகள்

இனி பாடப்போவதில்லை... அதிர்ச்சியளித்த அரிஜித் சிங்!

பாடல்கள் பாடப்போவதில்லை என அரிஜித் சிங் அறிவிப்பு...

Updated On : 28 ஜனவரி, 2026 at 6:36 AM
அரிஜித் சிங்
பகிர்:

பிரபல பாடகர், இசையமைப்பாளர் அரிஜித் சிங் பின்னணி பாடல்களைப் பாடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

இந்தியளவில் மிகப்பிரபலமான பாடகர்களில் ஒருவர் அரிஜித் சிங். இசையமைப்பாளராகவும் பல திரைப்படங்களுக்கு சிறந்த இசையைக் கொடுத்துள்ளார்.

தமிழில், ‘நான் உன் அழகினிலே’, அடடா என்ன ஆழகு உள்ளிட்ட பாடல்களைப் பாடி வரவேற்பைப் பெற்றார். பாலிவுட்டில் பல பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் அரிஜித் சிங் இல்லாமல் நடைபெறுவது இல்லை.

இந்த நிலையில், அரிஜித் சிங் திரைப்படங்களில் பின்னணி பாடல்களைப் பாடப்போவதில்லை என அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும், திரைப்படங்களுக்கு இசையமைப்பேன் எனத் தெரிவித்துள்ளார். இருந்தும், பாடகர் அரிஜித் சிங்கை நேசிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →