ஓடிடிக்கு வரும் சித்தாரே ஜமின் பர்!
சித்தாரே ஜமின் பர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...
யூடியூபில் போதிய வரவேற்பு இல்லாததால் ஆமிர் கானின் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர் கான். அவரது நடிப்பில், எழுத்தாளர் திவி நிதி சர்மா எழுதி, இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கிய ”சித்தாரே ஜமீன் பர்” திரைப்படம் கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியாகி ரூ. 150 கோடி வரை வசூலித்தது.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, கூடைப்பந்து சொல்லித் தரும் பயிற்சியாளராக, ஆமிர் கான் நடித்திருந்த இந்தப் படம், மொழிகளைக் கடந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றது.
தொடர்ந்து, தயாரிப்பாளரான ஆமீர் கான், சித்தாரே ஜமீன் பர் திரைப்படத்தை எந்தவொரு முன்னணி ஓடிடி தளங்களிலும் வெளியிடாமல், யூடியூபில் கட்டணம் வசூலித்து அனைவரும் காணும் வகையில் வெளியிடுவோம் என அறிவித்திருந்தார்.
கூறியதுபோல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேரடியாக யூடியூபில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது சோனி லைவ் ஓடிடிக்கு இப்படத்தை விற்பனை செய்ததாகவும் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. யூடியூபில் போதிய வரவேற்பு இல்லாததாலேயே ஆமீர் கான் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.