நெட்பிளிக்ஸில் வெளியாகும் கருப்பு?
கருப்பு உரிமையைப் பெற்ற நெட்பிளிக்ஸ்...
நடிகர் சூர்யாவின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவுக்கே இந்த நிலைமையா? என அவரின் ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய கருப்பு ஒவ்வொரு மாதமாகத் தள்ளித், தள்ளி தற்போது மே வெளியீடாக திரைக்கு வருமென கூறப்படுகிறது.
சூர்யாவின் 46-வது படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், அன்பான ரசிகர்களே அடுத்த திங்கள்கிழமை (மார்ச் 23) எனக் குறிப்பிட்டுள்ளார். இது, கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பாக இருக்கலாம் என்பதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓடிடி உரிமம் விற்காததாலே இவ்வளவு நாள் கருப்பு வெளியாகாமல் இருக்கிறது எனத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.