முகப்பு
செய்திகள்

2015 சென்னை வெள்ளத்தைப் படமாக்கும் ரவிக்குமார்?

சூரி - ரவிக்குமார் திரைப்படம் குறித்து...

Updated On : 30 மார்ச் 2026, 4:58 pm IST
சூரி, ரவிக்குமார் - file
பகிர்:

நடிகர் சூரி நடிக்கவுள்ள புதிய திரைப்படம் சென்னை வெள்ளத்தை மையமாகக் கொண்டு உருவாகிறதாம்.

இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களைத் தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

Advertisement

Advertisement

தற்போது, புதிய தகவலாக இப்படம் 2015 ஆம் ஆண்டு சென்னை செம்பரம்பாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து வைத்து உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

அறிவிப்பு போஸ்டரில் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்திருப்பது போன்ற தோற்றம் இடம்பெற்றிருந்தது இத்தகவலை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

மேலும், இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும் பெரும்பாலான காட்சிகளைச் சென்னையில் எடுக்கவும் திட்டமிட்டுள்ளனராம்.

summary

Actor Soori's new film is reportedly based on the Chennai floods.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.