நியூஸ் ரீல்

துருவங்கள் பதினாறு இயக்குநரின் அடுத்த படைப்பு நரகாசூரன்

சமீபத்திய வரவுகளில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பரவலான வரவேற்பைப் பெற்ற படம் "துருவங்கள் பதினாறு'.

DIN

சமீபத்திய வரவுகளில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பரவலான வரவேற்பைப் பெற்ற படம் "துருவங்கள் பதினாறு'. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன், நம்பிக்கைக்குரிய இயக்குநர்களின் வரிசையில் வைத்துப் பார்க்கப்படுகிறார். இவரின் அடுத்த படைப்பாக உருவாகவுள்ள படம் "நரகாசூரன்". "துருவங்கள் பதினாறு' படத்துக்காக முதன் முதலில் அரவிந்த்சாமியைத்தான் கார்த்திக் நரேன் அணுகினார். ஆனால் அவரால் அப்போது அப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதனால் இப்போது இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். ஸ்ரேயா சரண், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். முதலில் இப்படத்தில் ஒப்பந்தமான நாக சைதன்யா விலகவே, அவருக்குப் பதிலாக சந்தீப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கி, ஒரே மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT