முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை: ஜெகன்மோகன் ரெட்டி

அரசு மருத்துவர்கள் யாரும் இனி தனியார் மருத்துவமனைகளை நடத்தக் கூடாது என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Updated On : 20 செப்டம்பர், 2019 at 5:52 PM
பகிர்:

அரசு மருத்துவர்கள் யாரும் இனி தனியார் மருத்துவமனைகளை நடத்தக் கூடாது என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் நேற்று பேசியதாவது:

அரசின் ‘ஆரோக்கிய ஸ்ரீ’ மருத்துவ அட்டை வைத்திருக்கும் ஏழைகளுக்கு மருத்துவ செலவு ரூ.1,000 தாண்டினால் மற்ற செலவுகளை அரசே ஏற்கும். இத்திட்டம் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்வோரின் குடும்பத்தினருக்கு, நோயாளி குணம் அடையும் வரை மாதம் ரூ.5000 நிதி உதவி செய்யப்படும்.

Advertisement

ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தில் 2,000 நோய்கள் இணைக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், ஆந்திரா, தமிழகம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

ஆந்திர மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை அல்லது ‘கிளினிக்’ நடத்தக் கூடாது. இவ்வாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.