புதுதில்லி: நாடு முழுவதும் ஐஐடிக்களில் கலந்தாய்வு நடத்தவும், மாணவர் சேர்க்கைக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வித்தித்துஉத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஐஐடிக்களில் நுழைவு தேர்தவில் ஹிந்தி மொழி வினாத்தாளில் ஏற்பட்ட பிழைக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் பிழை இல்லாவிட்டாலும், எழுதியவர்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. 2 வினாக்களுக்கு 7 சலுகை மதிப்பெண்கள் (கிரேஸ் மார்க்) வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த பல்ராம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், சென்னை உள்ளிட்ட, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ஐஐடிக்களிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்துவதற்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும்வரை இந்த உத்தரவில் அமலில் இருக்கும்.
மேலும், ஐஐடி நுழைவுத் தேர்வு, கலந்தாய்வு தொடர்பான வழக்குகளை மற்ற கீழ் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கின் விசாரணை வரும் திங்கள்கிழமை (ஜூலை 10) ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.