கல்வி

முதல் 3 இடங்களை வெளியிடக் கூடாது: பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12, 10-ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பட்டியலை வெளியிடக் கூடாது என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12, 10-ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பட்டியலை வெளியிடக் கூடாது என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் எச்சரித்தார்.
தமிழகத்தில் 12, 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட, பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பட்டியலை வெளியிடக் கூடாது என்று அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
அதன்படி, முதல் 3 இடங்களை வெளியிட்டு விளம்பரம் செய்வதை மாவட்டத்தின் அனைத்து தனியார் பள்ளிகளும் கைவிட வேண்டும்.
மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் எச்சரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT