மரணமே வந்தாலும்... என் திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்
மரணமே வந்தாலும் எனது திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்கிறான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதைப் பற்றி...
மரணமே வந்தாலும் எனது திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்கிறார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் பிரசாரம் மேற்கொண்டுள்ள தமிழ்நாட்டு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மறைமலைநகரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “என் மீது அவதூறு பேசுவதையே பலரும் விரும்புகின்றனர். அவர்களில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஒருவராக இருக்கிறார். இந்த உலகத்திலேயே மரணத்தைச் சந்திக்காத எவரும் இருக்க முடியாது. யாரும் மரணத்தைத் தவிர்க்க முடியாது.
Advertisement
நான் முதல்வராக வந்தவுடன் முதல் கையெழுத்தே மகளிர் இலவசப் பேருந்துக்கும், மகளிர் உரிமைத் தொகைக்கும் போட்டேன். இந்த அனைத்துக்கும் கையெழுத்துப் போட்ட நான் மண்ணுக்குள் போக வேண்டுமாம்.
குழந்தைகள் அனைவரும் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் என அவர்களின் வெற்றியைப் பார்த்துப் பெருமைப்படுகிற நான் கரோனாவில் போயிருக்க வேண்டுமாம். நான் கரோனாவில் போயிருக்க வேண்டுமாம். மாதந்தோறும் உரிமைத் தொகை கொடுத்த நான் இல்லாமல் போகனுமாம். இந்த மாதிரியான திட்டங்களை செயல்படுத்தும் நான் மண்ணுக்குள் போகனுமாம்.
இந்த ஸ்டாலினுக்கும் மரணம் வரும். என்னையும் மண்ணில் புதைப்பார்கள். சவால் விட்டு சொல்கிறேன். இந்த ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களைப் மண்ணில் புதைக்கிற துணிச்சல் யாருக்கும் வராது. மரணமே வந்தாலும், என்னுடைய திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்” என்றார்.