கே.என். நேரு, செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல்!
திமுக அமைச்சர் கே.என். நேருவும், தவெகவின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் வேட்புமனு தாக்கல்..
திமுக அமைச்சர் கே.என். நேருவும், தவெகவின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையனும் இன்று(மார்ச் 30) வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
234 தொகுதிகளுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் சனிக்கிழமை (மார்ச் 28) அறிவிக்கப்பட்டன.
10-வது முறையாக தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் கே. என். நேரு திருச்சி மேற்கு தொகுதியில் களம் காண்கிறார்.
வேட்புமனு தாக்கல் செய்தபின் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது தவெக தலைவர் விஜய்க்கு பயமாக இருக்கலாம். திருச்சி கிழக்கில் கண்டிப்பாக வெல்வோம், இந்த முறையும் திமுகவுதான் கதாநாயகன் இவ்வாறு அவர் கூறினார்.
அதேசமயம், தவெகவின் செங்கோட்டையன் ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் விஜய் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவை தாக்கல் செய்தார்.