11-வது முறையாக காட்பாடியில் போட்டியிடும் துரைமுருகன் இன்று வேட்புமனு தாக்கல்!
காட்பாடி தொகுதியில் போட்டியிட அமைச்சர் துரைமுருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
காட்பாடி தொகுதியில் போட்டியிட அமைச்சர் துரைமுருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.
திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகின்றார்.
Advertisement
Advertisement
இந்தத் தொகுதியில் கடந்த 1996 முதல் தொடர்ந்து எம்.எல்.ஏ. ஆக இருந்துவரும் இவர் அதற்கு முன்னர் 1971, 1984 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் அங்கு போட்டியிட்டிருந்தார். இவர் ராணிப்பேட்டையில் 2 முறையும், காட்பாடியில் 9 முறையும் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் 11 வது முறையாக போட்டியிடும் துரைமுருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Duraimurugan, contesting from Katpadi for the 11th time, files his nomination today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.