இப்ப எம்எல்ஏ தொகுதி மீது ஏன் ஆர்வம்? 2 ஆவது முறையாகப் போட்டி!
காட்டுமன்னார்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் 2016 தேர்தலில் தொல்.திருமாவளவன் போட்டியிட்டு வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாக. முருகுமாறன் வெற்றிபெற்றார்.
87 வாக்குகளில் இழந்த தொகுதியை பிடிக்க தற்போது காட்டுமன்னார் கோவில் (தனி) தொகுதியில் தொல்.திருமாவளவன் மீண்டும் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
மக்களவை உறுப்பினராவது தனது கனவு எனக் கூறி வந்த தொல்.திருமாவளவன், தனது கனவை நிளைவாக்கும் வகையில் 3 முறை எம்.பி.யாக தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது கட்சியினர் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசிகவின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
மாநில அரசியலில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும். கூட்டணிக் கட்சியின் அமைச்சரவையில் பங்கேற்பதற்காகவும் சட்டப் பேரவைத் தேர்தலில் தொல்.திருமாவளவன் போட்டியிடுவதாக தெரிவித்தனர்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட கட்சியின் பழைய நிர்வாகிகள் பலர் வாய்ப்பு கேட்டு நெருக்கடி கொடுத்ததால், தானே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என மேலும் சில நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.