வேலைவாய்ப்பு

யுனைட்டெட் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை: பட்டதாரிகள் 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இன்சூரன்ஸ் கம்பெனியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 696 உதவியாளர்கள் பணியிடங்களை

ஆர். வெங்கடேசன்


பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இன்சூரன்ஸ் கம்பெனியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 696 உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 131 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி: Assistant

காலியிடங்கள்: 696

சம்பளம்: மாதம் ரூ.14,435 - 32,030

வயதுவரம்பு: 30.06.2017 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரு கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.uiic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், பெரம்பலூர், நாகர்கோவில், கன்னியாகுமாரி, மதுரை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2017

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 22.09.2017

முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/8/16/UIIC-Assistant-Syllabus-2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT