வேலைவாய்ப்பு

தகவல்தொடர்பு அதிகாரி வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள தகவல்தொடர்பு அதிகாரிப் பணிக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள தகவல்தொடர்பு அதிகாரிப் பணிக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 26 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.11/2017

பணி: Office (Indian Information Service)

காலியிடங்கள்: 44 ( தமிழ் - 04, ஹிந்தி - 19, ஆங்கிலம் - 21)

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இளநிலை பட்டம் பெற்று Journalism, Mass Communication பிரிவில் டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது Journalism Mass Communication பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (தமிழ், ஆங்கிலம், ஹிந்தி பாடம் படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்)

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை  ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2017

விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் செய்து கொள்ள வேண்டிய கடைசி தேதி: 30.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு மறைவு: ஜி.கே.மணி இரங்கல்

திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரிப்பு: கே.பி.ராமலிங்கம்

கோயில் திருவிழாவில் தகராறு: கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

தருமபுரியில் ரூ.19.20 கோடியில் அமைகிறது பட்டுக்கூடு வா்த்தக மையம்: 80,000 சதுரஅடியில் பணிகள் தீவிரம்

பட்டாசு விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT