முகப்பு
வேலைவாய்ப்பு

நர்சிங் முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் செவிலியர் வேலை

புதுதில்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நாட்டின் மிகப்பெரிய உருக்கு தயாரிப்பு நிறுவனமான செயில்

Updated On : 9 ஏப்ரல், 2018 at 1:45 PM
பகிர்:

புதுதில்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நாட்டின் மிகப்பெரிய உருக்கு தயாரிப்பு நிறுவனமான செயில் நிறுவனத்துக்கு மூன்று சிறப்பு உருக்கு நிறுவனங்களைத் தவிர்த்து செயில் நிறுவனத்துக்கு சொந்தமாக பிலாய், ரூர்கேலா, துர்காபூர், பொகாரோ மற்றும் பர்ன்பூர் ஆகிய ஐந்து இடங்களில் ஒருங்கிணைந்த உருக்காலைகள் உள்ளன.

தற்போது மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள உருக்காலையில் காலியாக உள்ள 130 பயிற்சி செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மொத்த காலியிடங்கள்: 130

Advertisement

பணியிடம்: மேற்கு வங்கம் (துர்காபூர்)

பணி: செவிலியர் (Nurse)

வயதுவரம்பு: 22.04.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ பொது நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.8,000 ஆயிரம் + இதர சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Director’s Conference Hall, DSP main Hospital, Durgapur-713205.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1_Bx_uoRMZ_UUyRR7h0rqCPsqI53PnkXV/view என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.