தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறையின் விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள சீருந்து ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சீருந்து ஓட்டுநர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
தகுதி: 8-ஆம் வகுப்பு சான்றிதழுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டது. இரண்டு ஆண்டு ஓட்டுநர் பணியில் முன்அனுபவம் மற்றும் வாகன தொழில்நுட்பத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: துணை ஆணையர்(மாவ) அலுவலகம், வணிகவரி கட்டிடம், மதுரை ரோடு, விருதுநகர். இதனை நேரிலும் அனுப்பலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி: 16.02.2018