சென்னை: சவூதியில் மருத்துவத் துறைறயில் உள்ள காலிப் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சவூதி அரேபிய நாட்டில் உள்ள முன்னணி மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியா், டெக்னீசியன், செவிலியா் மேற்பார்வையாளா், தொற்றுக் கட்டுப்பாட்டு ஆய்வாளா், தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளா், தலைமை செவிலியா் உள்ளிட்ட பணிப் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செவிலியா் (ஆண்/பெண்) பணிக்கு இளநிலை அல்லது பட்டயக் கல்வி முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் பணிக்கு இளநிலைக் கல்வி முடித்திருக்க வேண்டும். செவிலியா் மேற்பார்வையாளா், தொற்றுக் கட்டுப்பாட்டு ஆய்வாளா், தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளா், தலைமை செவிலியா் பணி இடங்களுக்கு முதுநிலை அல்லது பி.எச்.டி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து பிரிவுகளுக்கும் 35 வயதுக்குட்பட்டோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அவா்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் இரண்டாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்குத் தகுதி உள்ளவா்கள் www.omcmanpower.com/nurse/nurse.php என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம். தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்கு அனுபவத்துக்கேற்றறவாறு மாத ஊதியம், இலவச விமான பயணச்சீட்டு, உணவுப்படி, தங்குமிடம், ஒப்புச்சீட்டு, மருத்துவச் சலுகை மற்றும் சவூதி அரேபிய நாட்டின் சட்டத்திட்டத்துக்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் 044 2250 5886, 82206 34389, 95662 39685 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.