வேலைவாய்ப்பு

ரூ.1.16 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அழைப்பு! 

தினமணி



தமிழக சிறைச்சாலையில் காலியாக உள்ள சிறைக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: சிறைக் காவலர் - 01 

தகுதி: குற்றவியல் துறை, குற்றவியல் நீதி நிர்வாகம், சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. ரூ.36,900 - ரூ.1,16,600 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2019 

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.11.2019 

எழுத்துத் தேர்வு நாட்கள் மற்றும் நேரம்: எழுத்துத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டது. முதல் தாள் 22.12.2019 அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். இரண்டாம் தாள் 22.12.2019 அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். 

மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/latest-notification.html என்னும் லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT