ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை நிரப்பப்பட உள்ள 495 விஞ்ஞானி பணியிடங்களுக்கான அறிவிப்பு
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை நிரப்பப்பட உள்ள 495 விஞ்ஞானி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 495
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Advertisement
பணி: Scientist-‘B’ Group ‘A’ (S&T) - 288
சம்பளம்: மாதம் ரூ.56,100- 1,77,500
பணி: Scientific/Technical Assistant - ‘A’ Group ‘B’ (S&T) - 207
சம்பளம்: மாதம் ரூ. 35,400- 1,12,400
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள், எம்.எஸ்சி, எம்.டெக்., எம்சிஏ., எம்.இ., எம்.பில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம் .
விண்ணப்பிக்கும் முறை: https://www.calicut.nielit.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும்விவரங்களுக்கு https://www.calicut.nielit.in/nic/documentformats/DetailedAdvertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.06.2020