வேலைவாய்ப்பு

கடலோர காவல் படையில் வேலை: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய கடலோர காவல் படையில் நிரப்பப்பட 50 பணியிடங்களுகான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தினமணி


இந்திய கடலோர காவல் படையில் நிரப்பப்பட 50 பணியிடங்களுகான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: NAVIK (Domestic Branch) 10th Entry:01/2021

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 5 சதவீத மதிப்பெண்கள் சலுகை வழங்கப்படும். உடற்தகுதியாக குறைந்தபட்சம் 157 செ.மீட்டர் உயரமும், மார்பளவு 5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மையும், 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 7 நிமிடத்தில் ஓடி முடிக்கும் திறன், மேலும் 20-squatups, 10-pushups திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT