வேலைவாய்ப்பு

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு... துணை ராணுவப் படையில் வேலை

இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவப் படையில் (எஸ்எஸ்பி) துணை ஆய்வாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவப் படையில் (எஸ்எஸ்பி) துணை ஆய்வாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.338/RC/SSB/Combined Advt./Sub-Inspectors/2020

பணி: Sub-Inspector(Pioneer)
காலியிடங்கள்: 18
வயதுவரமபு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Sub-Inspector(Draughtsman)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் 

பணி: Sub-Inspector(communication)
காலியிடங்கள்: 56
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல், இயற்பியல், தகவல் தொடர்பியல் போன்ற ஏதாவதொறு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Sub-Inspector (Staff Nurse)
காலியிடங்கள்: 39
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  அறிவியல் பாடப்பிரிவில்  பிளஸ் 2 தேர்ச்சியுடன் 3 ஆண்டு பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.ssbrectt.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.08.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து! 16 பேர் பலி

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

2025-ல் அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்கள் வெளியேற்றம்! - மத்திய அரசு தகவல்!

ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக வாதம்: மமதா பானர்ஜி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT