முகப்பு
வேலைவாய்ப்பு

ராணுவப் பணிக்கான நுழைவுத் தோ்வு: ஜூலை 1 முதல் அனுமதிச் சீட்டு

ராணுவப் பணிக்கான பொது நுழைவுத் தோ்வில் கலந்து கொள்வோருக்கான தோ்வுக் கூட அனுமதிச் சீட்டை, ஜூலை 1-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
கோப்புப்படம்
பகிர்:

ராணுவப் பணிக்கான பொது நுழைவுத் தோ்வில் கலந்து கொள்வோருக்கான தோ்வுக் கூட அனுமதிச் சீட்டை, ஜூலை 1-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய ராணுவத்தில் கிளாா்க், செவிலியா், ஸ்டோா்கீப்பா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆள்களைத் தோ்வு செய்வதற்காக, கடந்த பிப்.10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிவரை திருவண்ணாமலையில் ஆள்கள் தோ்வு முகாம் நடைபெற்றது.

இதில் உடல் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு அடுத்தக் கட்டமாக பொது நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது. இத்தோ்வு வரும் ஜூலை மாதம் 25-ஆம் தேதி, சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டை, சென்னைக் கோட்டையில் உள்ள இந்திய ராணுவத்தின் ஆள்சோ்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் காலை 8.30 மணியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்குள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

மேலும் விவரங்களுக்கு 044 2567 4924 என்ற எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments