மணிப்பூரில் வெடிகுண்டு தாக்குதல்! 2 குழந்தைகள் பலி!
மணிப்பூரில் வெடிகுண்டு வீசியதில் இரண்டு குழந்தைகள் பலியானது குறித்து...
மணிப்பூர், பிஷ்ணுபூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பொதுமக்களின் குடியிருப்புப் பகுதியில் பயங்கரவாதிகள் குண்டுவீசியதில் இரண்டு குழந்தைகள் பலியானதோடு அவர்களுடைய தாய் படுகாயம் அடைந்தார்.
அலுவலர்களின் தகவலின்படி, இந்தச் சம்பவம் அதிகாலை 1 மணிக்கு குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நடந்திருக்கிறது. இதில் 5 வயதுடைய ஒரு குழந்தையும் 6 மாத மற்றொரு குழந்தையும் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்த பாஜக எம்.எல்.ஏ. சாந்தி சிங், இதை ஒரு ‘கொடுமையான செயல்’ என விவரித்ததோடு, இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
குக்கி பயங்கரவாத அமைப்புக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் கூறிய அவர், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்தார். மேலும் குழந்தைகளை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் பதிவுசெய்தார்.
மேலும் பேசிய சாந்தி சிங், சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் இதற்கானத் தீர்வு எட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.
An incident in the Bishnupur district of Manipur, in which terrorists detonated a bomb in a residential area early Tuesday morning—killing two children and critically injuring their mother—has caused a great sensation in the region.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.