ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!
ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா செய்துள்ளதைப் பற்றி...
ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
டாடா குழுமம் தன் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இல்கர் அய்சி தலைமைப் பதவியை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் கேம்ப்பெல் விலசன் நியமிக்கப்பட்டார்.
நியூசிலாந்தைச் சேர்ந்த கேம்ப்பெல் வில்சன்(55), விமானப் போக்குவரத்துத் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இவர், இதற்கு முன் சிங்கப்பூரில் உள்ள ஸ்கூட் விமான சேவை நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பணியாற்றியவர்.
Advertisement
கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா செய்தது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.
வில்சனின் ஐந்தாண்டுப் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், அவரின் பதவி விலகலைத் தொடர்ந்து அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியைத் தேர்வு செய்யும் பணியை ஏர் இந்தியா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்தாண்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்து நொங்கியதில், 241 பேர் பலியாகினர். இந்தத் துயரச் சம்பத்தில் ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியான கேம்ப்பெல் வில்சன் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க... பாலங்கள் கட்டிக்கொள்ளலாம்... ஆனால், அமெரிக்காவுக்குப் பாடம் புகட்ட சரியான நேரம் இதுதான்: ஈரான்