ரயில்வேத் துறையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!
தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் சரக்கு ரயில் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் சரக்கு ரயில் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தென்மேற்கு ரயில்வேத் துறை மற்றும் சக்கர தொழிற்சாலை ஆகியவற்றில் வேலை செய்யும் பணியாளர்கள் மட்டும் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
மொத்த காலியிடங்கள்: 145
பணி: மேலாளர்
தகுதி: தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் பிரிவுகள், பணிமனைகள், தலைமையகம் போன்ற இடங்களில் பணிபுரியும் பணியாளர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளின் 5 ஆவது பிரிவின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு: 18 முதல் 42க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழியில் நடத்தப்படும் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrchubli.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2022
Related Article
இந்திய வனத்துறையில் வேலை வேண்டுமா..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பித்துவிட்டீர்களா...? செயில் நிறுவனத்தில் பயிற்சி ஆசிரியர் வேலை
ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் மத்திய பட்டு நிறுவனத்தில் வேலை: 25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்டிஎஸ் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தில் வேலை: ஏப்.30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு