வேலைவாய்ப்பு

இந்து அறநிலையத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்கலாம் வாங்க!

தினமணி


காஞ்சிபுரம் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: ஆகம ஆசிரியர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: ஏதாவதொரு வேத ஆகம பாட சாலையில் (வைணவம்) 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  வைணவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத, ஆகம பாடசாலையில் 4 ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

பணி: சமையலர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 50க்கம் மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: சமையல் உதவியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் உணவு தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

பணி: எழுத்தர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும். 

பணி: தலைமை ஆசிரியர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: தமிழ் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றி பி.எட் முடித்திருக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சான்றொப்பம் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.01.2022

மேலும் விவரங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் சென்று தெரிந்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT