கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி வெளியீடு

வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. 

தினமணி

சென்னை: வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட  7,382 பணியிடங்களுக்கு வரும் 24 ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

அதன்படி, தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய ஒருமுறை பதிவேற்ற மூலம் (ஓடிஆர்) கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

SCROLL FOR NEXT