தமிழக அரசில் ரூ.1,34,200 சம்பளத்தில் வேலை வேண்டுமா? அறிவித்தது டிஎன்பிஎஸ்சி!
தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 161 குரூப் 5ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 161 குரூப் 5ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 161
நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Section Officer in Secretariat – 74
பணி: Assistant Section Officer in Secretariat (Finance Department) - 29
சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,34,200
பணி: Assistant in Secretariat (Other than Law and Finance Department) - 49
பணி: Assistant in Secretariat (Finance Department) - 09
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 73,700
தகுதி: வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசு பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வணிகவியல், பொருளாதாரம், புள்ளியியல் போன்ற பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: அரசு அலுவலகங்களில் பணி சார்ந்த துறைகளில் உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர் பணிகளில் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.
வயது வரம்பு: 1.7.2022 தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 35 மற்றும் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.100-ம், தேர்வு கட்டணமாக ரூ.150-ம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிரந்த பதிவு செய்திருப்பவர்கள் தேர்வு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பட்டதாரிகள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 21.09.2022க்குள் விரைந்து விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றம் அல்லது திருத்தம் செய்யப்பட வேண்டியிருந்தால் 26 முதல் 28 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/21_2022_Group_V_A_Notfn_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Related Article
அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா?
வங்கியில் வேலை வேண்டுமா? 5008 காலியிடங்களுக்கு எஸ்பிஐ அறிவிப்பு!
இளைஞா் நீதி குழுமத்தில் உதவியாளா் பணி: அக். 3க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழக அரசில் வேலை... எங்கு, எப்போது, எப்படி விண்ணப்பிப்பது?
டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு... குரூப்-3ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!