வேலைவாய்ப்பு

ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அரசின் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

இந்திய அரசின் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Design Engineer(Mechanical)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.50,000

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Production, Manufacturing, Industrial Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும்.

பணி: Design Assistant(Mechanical)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.40,000

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Production, Manufacturing, Industrial Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்தவும் அல்லது Armoured vehicles Nigam Limited, Chennai என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்பவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.avnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Works Manager(Admin), Engine Factory, Avadi, Chennai. Pin-600 054.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 18.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒசூரில் தெருநாய்கள் கடித்ததில் மூன்று சிறுவா்கள் காயம்

தில்லியில் ரேபிஸ் நோயால் இதுவரை 49 போ் உயிரிழப்பு

6 மாதங்களுக்குபின் வடநெம்மேலி பாம்புப் பண்ணை திறப்பு

கீழம்பி ஊராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

2026 தோ்தலுக்கான திருத்தணி, திருவள்ளூா் வேட்பாளா்கள்: சீமான் அறிமுகம் செய்தாா்

SCROLL FOR NEXT