மிஸ் பண்ணிடாதீங்க... பட்டதாரிகளுக்கு எஸ்பிஐ வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு!
பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள 150 நிதியியல் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள 150 நிதியியல் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trade Finance Officer(MMGS-II)
காலியிடங்கள்: 150
Advertisement
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐஐபிஎப் கல்வி நிறுவன அங்கீகாரம் பெற்ற Forex சான்றிதழ் பெற்று Trade Financing துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.12.2023 தேதியின்படி 23 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.750. இதர பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bank.sbi/careers/current.openings என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.6.2024