ராணுவ அதிகாரி பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள ராணுவ அதிகாரி பணியிடங்களுக்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள ராணுவ அதிகாரி பணியிடங்களுக்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.10/2024-NDA-II
தேர்வு பெயர்: National Defence Academy and Naval Academy Examination (II), 2024
Advertisement
Advertisement
மொத்த காலியிடங்கள்: 404
1. National Defence Academy (Army) – 208
2. National Defence Academy (Navy) – 42 Posts
3. National Defence Academy (Air Force)
i.Flying – 92
ii.Ground Duties (Tech) – 18
iii. Ground Duties (Non Tech) – 10
4. Naval Academy (10+2 Cadet Entry Scheme) -34
வயதுவரம்பு: 4.6.2024 தேதியின்படி கணக்கிடப்படும். 2.1.2006-க்கும் 1.1.2009-க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: National Defence Academy (Army)-க்கு விண்ணப்பிப்போர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Navy மற்றும் Air Force பணிக்கு விண்ணப்பிப்போர் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு பிளல் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் எஸ்எஸ்பி ஆல் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 1.9.2024
தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், புதுச்சேரி
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 2025
நேர்முகத் தேர்வி தேர்ச்சி பெறுவோருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி தொடங்கப்படும் தேதி: 2.7.2025
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.6.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.