விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடற்படையில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி
இந்திய கடற்படையில் காலியாக உள்ள 360 BOAT CREW STAFF பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
இந்திய கடற்படையில் காலியாக உள்ள 360 BOAT CREW STAFF பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.
விளம்பர எண். 01/2025-BCS
மொத்த காலியிடங்கள்: 360
பணி: Topass
காலியிடங்கள்: 6
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நன்றாக நீந்தும் திறன் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயதுவரம்பு: 26.3.2025 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Fireman
காலியிடங்கள்: 78
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 26.3.2025 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Lascar
காலியிடங்கள்: 225
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 26.3.2025 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Syrang
காலியிடங்கள்: 57
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பணிக்கான பயிற்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 26.3.2025 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம், பேருந்து கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.3.2025