பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) 
வேலைவாய்ப்பு

சூப்பர் அறிவிப்பு... செபியில் 110 உதவி மேலளார் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 110 பணியிடங்கள் தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 110 பொது, சட்டம், தகவல் தொழில்நுட்பம், ஆய்வு, அதிகார மொழி, பொறியியல் ஆகிய குரூப் ஏ பணியிடங்களான உதவி மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்.30 முதல் தோராயமாக நவம்பர் 30-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 110

பணி: உதவி மேலாளர்(Assistant Manager)\

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. பொது - 56

2. சட்டம் -20

3. தகவல் தொழில்நுட்பம் - 22

4. ஆய்வு -4

5. மொழி -3

6. பொறியியல் (எலெக்ட்ரிக்கல்) - 2

7. பொறியியல் (சிவில்) - 3

சம்பளம்: மாதம் ரூ. 62,500 - ரூ.1,26,100 + இதர சலுகைகள் வழங்கப்படும்.

வயதுவரம்பு: 30.9.2025 தேதியின்படி 30 வயதிற்குல் இருக்க வேண்டும். .1.10.95-க்கு பின்னர் பிறந்தவராக இருக்கக்கூடாது. அரசு விதிகளின்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு முதுகலைப் பட்டம், முதுகலை டிப்ளமோ, சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம, பொறியியல் பாடப்பிரிவில் எலக்ட்ரிக்கல் மற்றும் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள், சிஏ, பட்டய நிதி ஆய்வாளர், நிறுவன செயலாளர் (சிஎஸ்), செலவு கணக்காளர் ஆகியவற்றில் தகுதிப் பெற்றவர்கள், பொருளாதாரம், வணிகம், தொழில் நிர்வாகம், நிதி, புள்ளியியல், டேட்டா சயின்ஸ், ஏஐ மெஷின் லேனிங், டேட்டா அனலிஸ்ட் ஆகிய பிரிவுகளில் முதுகலைப் பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பொருளாதரம், வணிகம் ஆகியவற்றில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்கள் முன்னுரிமை வழங்கப்படும் .

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை, இரண்டாம் நிலை கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பணியிடங்களுக்கேற்ப சொந்த மாநிலங்களில் பணி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.sebi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.100, இதர அனைத்து பிரிவினரும் ரூ. 1000 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: அக். 30-ம் தேதி முதல் நவ.30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

SEBI Recruitment of Officer Grade A (Assistant Manager) 2025 - General Stream, Legal Stream, Information Technology Stream, Research Stream, Official Language Stream, Engineering (Electrical) Stream and Engineering (Civil) Stream

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கத் தொடங்கிய ‘மோந்தா' புயல்!

ராஜாவை தூக்கி எறிந்த ஹிகாருவுக்கு பதிலடி கொடுத்த குகேஷ்!

பெங்களூரில் பைக்கில் மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்: மாயமான சின்ன திரை நடிகை பிடிபட்டார்!

SIR பணிக்கு திமுக ஏன் பயப்படுகிறது? | செய்திகள்: சில வரிகளில் | 28.10.25

ஆஸி.க்கு எதிரான போட்டிகளில் பவர்பிளே ஓவர்கள் மிகவும் முக்கியம்: சூர்யகுமார் யாதவ்

SCROLL FOR NEXT