டிப்ளமோ முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி: உடனே விண்ணப்பிக்கவும்!
பந்தாரா வெடிமருந்துத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 50 தொழில்பழகுநர் பயிற்சி குறித்து...
மஹாராஷ்டிரம் மாநிலம், பந்தாரா வெடிமருந்துத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 50 தொழில்பழகுநர் பயிற்சிக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியின் பெயர்: Technician Apprentice
காலியிடங்கள்: 50
Advertisement
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Diploma in Chemical Engineering - 10
2. Diploma in Mechanical Engineering - 10
3. Diploma in Electrical Engineering - 15
4. Diploma in Electronics Engineering - 15
தகுதி: பொறியியல் துறையில் பயிற்சி வழங்கப்படும் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.10,900 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விபரம் தபால், மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
ஏற்கெனவே அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.ddpdoo.gov.in என்ற இணையதளத்தில் மேற்கண்டபயிற்சி பற்றிய விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களுடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் முகவரி: The Chief General Manager, Ordnance Factory, Bhandara, Jawahar Nager (Post), Bhandara (Dist).
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 11.4.2026
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.