நாமக்கல்: நாமக்கல்லில் ஜன. 23-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாகச் சந்திக்கும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 23) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
தனியாா் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானவா்களை இந்த முகாமில் தோ்வுசெய்து கொள்ளலாம். இதில் பங்கேற்கும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. தகுதியும், விருப்பமும் உள்ளோா் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.