விண்ணப்பிக்கலாம் வாங்க... தில்லி அரசில் பொறியாளர், சட்ட உதவியாளர் பணி!
தில்லி அரசில் காலியாக உள்ள 911 உதவி செக்சன் அலுவலர், இளநிலை பொறியாளர், சட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு குறித்து...
தில்லி அரசில் காலியாக உள்ள 911 உதவி செக்சன் அலுவலர், இளநிலை பொறியாளர், சட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 911
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: உதவி செக்சன் அலுவலர்
காலியிடங்கள்: 587
பணி: இளநிலை பொறியாளர்(சிவில்)
காலியிடங்கள்: 314
பணி: சட்ட உதவியாளர்
காலியிடங்கள்: 10
தகுதி: டிப்ளமோ, இளங்கலை, பி.இ, பி.டெக், பி.எல் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.35.400 - 1,12,400
வயதுவரம்பு: 25.3.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவோர் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.dsssb.delhi.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.3.2026
மேலும் விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.