வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய அரசில் 3,000 காலியிடங்கள் அறிவிப்பு!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3000 சுருக்கெழுத்தர், ஸ்டோர் கீப்பர், எம்டிஎஸ், டெக்னீஷியன் போன்ற பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு குறித்து...
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3000 சுருக்கெழுத்தர், ஸ்டோர் கீப்பர், எம்டிஎஸ், டெக்னீஷியன் என பல்வேறு பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து வரும் மே 4 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். Phase-XIV/2026/Selection Posts
மொத்த காலியிடங்கள்: 3.003
Advertisement
Advertisement
பதவி: சுருக்கெழுத்தர் நிலை – II, பண்டக எழுத்தர், எம்டிஎஸ், தனி உதவியாளர், பண்டகக் காப்பாளர் நிலை-II,பொது சுகாதார செவிலியர் அலுவலர், மருத்துவ சமூக நல அலுவலர், துணை செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளர், இ.சி.ஜி. தொழில்நுட்ப வல்லுநர் (இளநிலை), பல் மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர், எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர், இளநிலை மருந்தாளர், தையல்காரர், பணிமனை உதவியாளர், சமையல்காரர், அலுவலக வாகன ஓட்டுநர், தொழில்நுட்ப உதவியாளர், கள உதவியாளர், பெண் மருத்துவ உதவியாளர், மருந்தாளுநர் (அலோபதி), மருந்தாளுநர் - எழுத்தர் (ஹோமியோபதி), இளநிலை மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர், பெண் சுகாதாரப் பார்வையாளர், செவிலியர் அலுவலர், மருத்துவ உதவியாளர், ஆயுர்வேத மருந்தாளுநர், அலுவலக உதவியாளர், உதவி வனக்காப்பாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், கணக்காளர், பண்டக உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் , ஆராய்ச்சி ஆய்வாளர், முதுநிலை கல்வி உதவியாளர், முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், ஆய்வக உதவியாளர், இளநிலை பொறியாளர், நூலகப் பணியாளர், மூத்த பாதுகாப்பு உதவியாளர், தொழிற்கல்வி பயிற்றுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள
தகுதி: 4.5.2026 தேதியின்படி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 4.5.2026 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, தட்டச்சு தேர்வு, டேட்டா என்ட்ரி, கணிதத் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி
விண்ணப்பிக்கும்முறை: https://ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.5.2026
விண்ணப்பிப்போரின் விரிவான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Staff Selection Commission Online Applications are invited from eligible candidates for Selection Posts as indicated in Annexure-III of this Notice.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.