இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சி பணி: காலியிடங்கள் 1,450
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் அளிக்கப்படும் பயிற்சிப் பணியாளர் பணிகள் குறித்து...
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான மற்றும் ஃபார்ச்சூன் “குளோபல் 500” நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 1961/1973 ஆம் ஆண்டு பயிற்சிப் பணியாளர் சட்டத்தின் கீழ் பானிபட் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் பயிற்சிப் பணியாளர்களாகப் பணியாற்றுவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பார்ப்போம்...
அறிவிப்பு எண். : PR/P/Apprentice/60(2026-27)
Advertisement
Advertisement
மொத்த காலியிடங்கள்: 1,450
பணி: தொழில் பழகுநர் பயிற்சி(அப்ரண்டீஸ் பயிற்சி)
பிரிவு: டிரேட் அப்ரண்டீஸ் அட்டெண்டன்ட் ஆபரேட்டர் - கெமிக்கல் பிளாண்ட்
காலியிடங்கள்: 274
பிரிவு: பிட்டர்
காலியிடங்கள்: 314
பிரிவு: டெக்னீஷியன் அப்ரண்டீஸ் (கெமிக்கல்)
காலியிடங்கள்: 327
பிரிவு: மெக்கானிக்கல்
காலியிடங்கள்: 83
பிரிவு: எலக்ட்ரிக்கல்
காலியிடங்கள்: 277
பிரிவு: இன்ஸ்ட்ரூமென்டேஷன்
காலியிடங்கள்: 70
பிரிவு: செக்ரட்டேரியல் அசிஸ்டெண்ட்
காலியிடங்கள்: 30
பிரிவு: அக்கவுண்டன்ட்
காலியிடங்கள்: 2
பிரிவு: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
காலியிடங்கள்: 73
தகுதி: பிளஸ் 2, ஐடிஐ. டிப்ளமோ, பி.எஸ்சி, பி.ஏ., பி.காம் முடித்தவர்கள் சம்மந்தபட்ட பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 12.8.2026 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி ஓபிசிபிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: சரியான தேர்வு பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் நேர்முகத் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.8.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Indian Oil Corporation Limited, one of the largest commercial undertakings in India and a Fortune “Global 500” Company...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.