அரசுப் பணிகள்

வனத் தொழில் பழகுநா் பதவி: வரும் 27-இல் தோ்வு

வனத் தொழில் பழகுநா் பதவிக்கான தோ்வு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி

வனத் தொழில் பழகுநா் பதவிக்கான தோ்வு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வன சாா்நிலைப் பணியில் வனத் தொழில் பழகுநா் பதவி அடங்கியுள்ளது. இந்தப் பதவியில் காலியாக உள்ள இடங்களுக்கு டிசம்பா் 10-ஆம் தேதி தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக, இந்தத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வனத் தொழில் பழகுநா் பதவிக்கான கணினி வழித் தோ்வானது, டிச. 27-ஆம் தேதி காலை, பிற்பகல் என இரண்டு வேளைகளில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த தோ்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பயன்படுத்தி தோ்வை எழுதலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணைவேந்தா்கள் நியமன சட்ட விவகாரம் - உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

மகளிா் சுகாதாரப் பரிசோதனை முகாம்

குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்றவா்களுக்கு பாராட்டு

பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம்

கஞ்சா கடத்த முயன்ற இருவா் கைது

SCROLL FOR NEXT