திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இரவு காவலர் - 5
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர் - 27
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 62,000
வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள்
www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்துடன் ரூ.30க்கான தபால் தலை ஓட்டப்பட்ட தபால் கவரையும்(அளவு 10 X 4 இன்ஞ்சஸ்) இணைத்து அதில் தங்களது முகவரி எழுதி அனுப்ப வேண்டும்.
திண்டுக்கல் மாவட்ட சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் வேலை வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 14.10.2022
மேலும் விவரங்கள் அறிய www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சுகாதாரத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... 10ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
எஸ்.எஸ்.சி. தேர்வு: 20,000 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு
வங்கியில் வேலை வேண்டுமா? 11-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... அறிவியல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய ரயில்வேயில் 3,115 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
சுமார் 5 லட்சம் காலியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?