அரசுப் பணிகள்

ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

சேலம் மாவட்டத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2005ன் படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணி

தினமணி


சேலம் மாவட்டத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2005ன் படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்கண்ட தகுதிகள் உள்ள பாதுகாப்பு அலுவலர் தேர்வு செய்யப்பட உள்ளார். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

பணி: பாதுகாப்பு அலுவலர்- 1 

சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.30,000 

தகுதி: சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்ற பெண்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

வயதுவரம்பு: பொது பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் https://salem.nic.in என்ற இணையதளத்தில்  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தங்களது சுய விவரங்களை பூர்த்தி செய்து 05.11.2022 அன்று மாலை 6 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சணத்தி என்றால் என்ன? மாரி செல்வராஜ் விளக்கம்!

அந்தி மாலை நேரம்... சரண்யா துராடி!

வண்ண மானே... ஸ்வேதா!

தங்கச் சிலை... சப்தமி கௌட!

இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?

SCROLL FOR NEXT