தமிழ்நாடு வக்பு வாரியத்தில் வேலை: ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு வக்பு வாரியத்தில், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஒப்பந்தப் அடிப்படையில் மாவட்ட வாரியாக ஓராண்டு பணியாற்றிட கீழ்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு வக்பு வாரியத்தில், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஒப்பந்தப் அடிப்படையில் மாவட்ட வாரியாக ஓராண்டு பணியாற்றிட கீழ்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: துணை ஆட்சியர் -1
சம்பளம்: மாதம் ரூ.40,000
பணி: வட்டாட்சியர் -11
சம்பளம்: மாதம் ரூ.40,000
பணி: துணை வட்டாட்சியர், கண்காணிப்பாளர்-11
சம்பளம்: மாதம் ரூ.30,000 + பயணப்படி ரூ.5,000
பணியிடம்: சென்னை
பணி: வருவாய் ஆய்வாளர்-11
சம்பளம்: மாதம் ரூ.25,000
பணியிடம்: பூந்தமல்லி, வேலூர், கடலூர், திருச்சி, இராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர். கோயமுத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி சரகங்கள்
பணி: கிராம நிர்வாக அலுவலர்-38
சம்பளம்: மாதம் ரூ.20,000
பணியிடங்கள்: அனைத்து மாவட்டங்கள்
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை 15.06.2023 மாலை 5 மணிக்குள் tnwb@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.