கோப்புப்படம் 
அரசுப் பணிகள்

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை: 8-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னையிலுள்ள தேசிய மாணவர் படை அலுவலகத்தில் (என்சிசி) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


சென்னையிலுள்ள தேசிய மாணவர் படை அலுவலகத்தில் (என்சிசி) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் இதர விவரங்கள்: 
பணி: அலுவலக உதவியாளர்(Office Assistant)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயது வரம்பு: 18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஓட்டுநர் (Driver)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
வயது வரம்பு:18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://cms.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Commanding Officer,
TNBTY NCC NO-28,
Dr.Alagappa Road, Sethu House Annexe, Purasaiwakkam, Chennai-600 084.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 16.6.2023 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT