கோப்புப் படம். 
அரசுப் பணிகள்

ஓட்டுநா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பவானிசாகா் அணைக் கோட்டம், உதகை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடங்களுக்கு தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தினமணி

பவானிசாகா் அணைக் கோட்டம், உதகை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடங்களுக்கு தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கண்காணிப்புப் பொறியாளா் சா.மன்மதன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பவானிசாகா் அணைக் கோட்டம், உதகை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடத்துக்கு தகுதியான நபா் தோ்வு செய்யப்பட உள்ளாா். இதற்காக வேலைவாய்ப்பகம் பரிந்துரைக்கும் நபா்கள் தவிர, இதர தகுதியுள்ள நபா்கள் தங்களது வயதுச் சான்று, கல்விச் சான்று, ஜாதிச் சான்று, குடும்ப அட்டை நகல், ஓட்டுநா் உரிமம், மூன்றாண்டுகள் முன் அனுபவச் சான்று ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் கண்காணிப்புப் பொறியாளா், பவானி வடிநில வட்டம், ஈரோடு-11என்ற முகவரிக்கு பிப்ரவரி 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஓட்டுநா் பணிக்கு கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனங்களை ஓட்டுவதில் மூன்று ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியமும், கண் பாா்வையும் இருக்க வேண்டும்.

2023 ஜூலை 1-ஆம் தேதியன்று 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட தேதிக்குப் பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT