தேசியச் செய்திகள்

இரவு 1 மணி வரை மதுக்கடைகள் திறப்பு: இங்கல்ல ஒடிசாவில்!

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஒடிசாவில் செவ்வாய்க்கிழமை (டிச. 31) நள்ளிரவு 1 மணி வரை மதுக்கடைகளைத் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஒடிசாவில் செவ்வாய்க்கிழமை (டிச. 31) நள்ளிரவு 1 மணி வரை மதுக்கடைகளைத் திறந்து வைக்க திங்கள்கிழமை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில மது விற்பனைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

புவனேசுவரம், கட்டாக் மற்றும் புரி ஆகிய நகரங்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டிச. 31-ஆம் தேதி நள்ளிரவு 1 மணி வரை இந்தியத் தயாரிப்பு அன்னிய வகை மதுபானங்களை விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில அரசின் 2008-ஆம் ஆண்டு மதுவிற்பனை விதி எண் 93-ன் அடிப்படையில், பொதுமக்களின் விருப்பத்திற்காக மதுக்கடைகளைத் திறந்து வைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT